Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 நவம்பர் 16 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து 33 ஆண்டுகளின் பின்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய வடமராட்சி கிழக்கு, குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை நீடிக்க பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
போர் காரணமாக குடத்தனை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா நாகேஸ்வரி (வயது-58), அவரது மகளான சின்னராஜா சுதர்சினி (வயது-42) மகனான சின்ன ராஜா சுதாகரன் (வயது-39) ஆகியோர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தனர்.
தற்போது படகு மூலமாக தாயகம் திரும்பி குடத்தனை பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றில் தங்கி இருந்தபோது பருத்தித்துறை பொலிஸாரால் கடந்த மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் புதன்கிழமை (15) முற்படுத்தப்பட்ட போது அவர்களின் விளக்கமறியலை நீதி மன்றம் நீடித்துள்ளது.
பு.கஜிந்தன்
12 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago