2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 09 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் திங்கட்கிழமை  (7) அன்று இரவு  பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது  புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை  (7) அன்று இரவு முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று செம்பியன் பற்று தெற்கு பகுதி முழுவதும் மேற்கொள்ள பட்டது .

இச் சுற்றி வளைப்பில் 8பொதிகள் அடங்கிய 15.795kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .