Janu / 2026 ஜனவரி 14 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் புதன்கிழமை (14) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
இதன் போது 14 kg எடையுடைய ஒன்பது பொதிகள் அடங்கிய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பூ.லின்ரன்

15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago