2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பூஜைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’

Niroshini   / 2021 ஜூலை 04 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வல்லிபுர ஆழ்வார் கோவிலில், ஜுன் 27ஆம் திகதியன்று நடைபெற்ற பூஜைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, வல்லிபுர ஆழ்வார் கோவில் புதிய நிர்வாக செயலாளர் வேலாயுதம் சிறிஞானசம்பந்தர் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், நேற்று  (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வல்லிபுர ஆழ்வார் கோவிலின் பழைய நிர்வாகத்தினரின் அத்துமீறிய தலையீட்டில், ஜுன் 27ஆம் திகதியன்று, சுகாதார விதிமுறைகளை மீறி பூஜை இடம்பெற்றதென்றார்.

சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கமைய, பொதுமக்களின் நன்மை கருதி, மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் சுகாதார நடைமுறையை பின்பற்றி, கோவிலில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .