2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரின் பணி மிக குறைவு

Janu   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட முரசுமோட்டை முருகானந்தா கல்லுரியில் சுமார்  550 மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முருகானந்தா ஆரம்பபாடசாலையில்  300க்கும் அதிகமான  மாணர்கள்  பல பகுதிகளிலும்  இருந்து, பேருந்து  மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கற்றல் நடவடிக்கைக்காக வருகின்றனர்.

இந் நிலையில்  பாடசாலை முன்பாக உள்ள வீதிக்கடவையில் காலை மாத்திரமே பொலிஸார் கடமைக்கு வருவதாகவும் மதியவேளை பாடசாலை  கற்றல் செயல்பாடுகள் முடிவடைந்து மாணவர்கள் வீடு செல்லும் வேளை பொலிஸார் வீதி பாதுகாப்புகடமைக்கு வருவதில்லை என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீதி விபத்துக்கள் அதிகம் நடைபெரும் பிரதான வீதி A-35 ஆகும். எனவே மணவர்களின் நலன் கருதி பொலிஸார் உரிய   நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்னதே அனைவரினதும்  வேண்டுகோளாக உள்ளது.

பு.கஜிந்தன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X