Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2022 ஜனவரி 12 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாங்குளத்தில் ஆலயம் ஒன்றில் பூஜை இடம் பெறாது தடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் வருகை தரும் மாங்குளம் இத்திமரத்தடி சித்தி விநாயகர் ஆலயத்திலேயே கடந்த 09ஆம் திகதி தொடக்கம் பூஜை கள் இடம் பெறவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
தனிநபர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக ஆலயப் பூஜைகள் நிறுத்தப்பட்டு பூஜை செய்து வந்த ஆலய குருக்களும் ஆலயத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது மக்களின் வழிபாட்டுத் தலத்தினை சிலரின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பூஜை கள், விழாக்கள் இடம் பெறாமல் தடுக்கப்படுவது நியாயமற்றது எனவும், இது குறித்து இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இது குறித்து பொலிஸ் நிலையத்திலும் முறைப்படு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago