2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முதலை கடித்து பெண் படுகாயம்

Janu   / 2024 மார்ச் 10 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலையினால் கடியுண்டு படுகாயமடைந்த நிலையில் பெண்ணொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்  . கடந்த  வியாழக்கிழமை  ( 07)  இடம்பெற்றுள்ளது .

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பின் மன்னாகண்டல் வசந்தபுரம் கிராமத்தை  சேர்ந்த  47 வயதுடைய சாமிநாதன் விசாலாட்சி என்ற பெண்ணே இவ்வாறு முதலையினால் கடியுண்டு காயமடைந்துள்ளார் .

குறித்த பெண் தமது வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகளை குடிநீருக்காக பேராற்றிற்கு கொண்டு சென்ற போதே, முதலை குறித்த பெண்ணின் வலது கையினை கடித்துள்ளதாக  தெரியவந்துள்ளது .

இதில் படுகாயமடைந்த பெண் உடனடியாக முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக  தெரியவந்துள்ளது .

மேலும்  , இதே  போன்று  20 நாட்களுக்கு முன்னரும் இப்பகுதியில் மாடு மேய்ச்சலில் ஈடுபட்ட  ஒருவர் பேராற்று பகுதிக்கு சென்ற போது முதலையினால் கடியுண்டு காலில் காயமடைந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

நடராசா கிருஸ்ணகுமார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X