Niroshini / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தம்வசம் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கல்முனை, மாளிகைக்காடு பௌசுல் வீதியைச் சேர்ந்த எம்.ஐ. அப்துல்மஜித் (வயது 50 ) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025