Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் திறந்த வெளி அரங்கில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த நினைவுப் பேருரை நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாளை காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை அலுவலகத்தில் கத்தமுல் குர்ஆன் வைபவமும் துஆ பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
26 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago