Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பகுதியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.
குறிப்பாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட - மருதமுனை மூன்றாம் பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாயல் பகுதியில் குடியேறியுள்ளவர்களின் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியுள்ளன.
இங்கு சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் வசித்து வருகின்றனர்.
இதேவேளை, மருதமுனைப் பிரதேசத்திலுள்ள சுனாமி வீட்டுத் திட்டங்களான - பிரன்ச் சிற்றி மற்றும் 65 மீற்றர் வீட்டுத் திட்டங்களும் வெள்ள அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.
இந்த நிலையில், இப்பகுதியிலுள்ள ராணுவத்தினர் - மாவட்ட செயலகத்துடன் இணைந்து, கிராம சேவகரின் ஒத்துழைப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
பாடசாலைகளில் தற்போது பரீட்சைகள் இடம்பெற்று வருவதன் காரணமாக, பரீட்சைகள் நிறைவடைந்ததும் - வெள்ளத்தால் இடம்பெயரும் குடும்பங்களை பாடசாலைகளில் அமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக – விபரங்களைச் சேகரிக்கும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
27 minute ago
32 minute ago
34 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
34 minute ago
38 minute ago