Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 23 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 32 பேர் பலியாகியுள்ளனர். நூரிதாபாத் நகருக்கு அருகில் பஸ் ஒன்றும் எண்ணெய் கொள்கலன் ஒன்றும் மோதியதால் வாகனங்கள் தீப்பற்றிக் கொண்டதாகவும் இதனால் 32 பேர் இறந்ததாகவும் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது பஸ்ஸின் சாரதி உறக்கத்திலிருந்ததாகவும் பஸ் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் பொலிஸ் அதிகாரி மொஹமட் பாருக் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் பெண்கள், சிறார்களும் அடங்குகின்றனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிர் தப்பிய பயணிகள் சிலர் இச்சம்பவம் தொடர்பாக கூறுகையில், வாகனத்தை நிறுத்தி விபத்தை தவிர்க்குமாறு இரு தடவை சாரதியிடம் பயணிகள் கோரியதாக தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றவுடன் சில இளைஞர்கள் மாத்திரம் பஸ்ஸிலிருந்து வெளியேறியதாகவும் ஏனையோர் உயிருடன் எரிந்ததாகவும் உயர் தப்பிய பயணியொருவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago