2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்னும் இரண்டே வாரங்களில், நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய அரசியல் கட்சி, கொடி, கொள்கைகளை அறிவிப்பார் என்று, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கில செய்திச் அலைவரிசையில், “ரஜினிநேதா (தலைவர் ரஜினி) அரசியல் வருகை” என்ற தலைப்பில், ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள், தமிழருவி மணியன் போன்ற தலைவர்களிடம் பேசி, ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்தது. 

இவர்களில், இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் கட்சி அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் ரஜினி கட்சியின் கொள்கைகள் என்னவென்பது குறித்தும் விரிவாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். 

“இன்னும் 2 வாரங்களில், ரஜினி தனது புதிய கட்சியை தொடங்கி விடுவார். அப்போது, அவர் உறுதி மொழிகளாக சில அறிவிப்புகளையும் வெளியிடுவார். தென்னிந்திய நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது ஆகியவை, அவரது உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.  கட்சியின் பெயரைப் பதிவு செய்யும் வேலைகளை, ஒரு குழு புதுடெல்லியிலிருந்து கவனித்து வருகிறது. ரஜினி கட்சியின் கொள்கை, முன் வைக்கும் மக்களுக்கான திட்டங்கள், ரஜினி மக்களுக்குத் தரும் வாக்குறுதிகளை ஒரு குழு தயாரித்து வருவதாகவும் ரஜினியே நேரடியாக அதை மேற்பார்வை செய்வதாகவும் கூறப்படுகிறது. இரண்டே வாரங்களில், ரஜினி கட்சி அறிவிப்பு உறுதி என்று தமிழருவி மணியன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X