2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட அணி வடமாகாண சம்பியனாக தெரிவு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட அணி வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில்,  வவுனியா மாவட்ட அணியும் மன்னார் மாவட்ட அணியும் மோதிக்கொண்டன.

போட்டி மிகவும் சூடு பிடித்ததுடன்,  இரு அணிகளும் கோல்கள் பெற வேண்டுமென்ற வேகத்துடன் விளையாடியபோதிலும் கோல்கள் பெறும் வாய்ப்பற்ற நிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றது. ஆட்ட நிறைவில் மன்னார் மாவட்ட அணி 03க்கு 00 என்ற கோல் கணக்கில் வவுனியா மாவட்ட அணியை வெற்றி பெற்று வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X