2026 மே 13, புதன்கிழமை

dd

மீனவர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை

Janu   / 2026 மே 13 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக, கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படக்கூடும் என்பதால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவர்களும் உயிராபத்து காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை (13) காலை வானிலை அவதானிப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25-35 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திரு. கஹவத்த குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாகப் புத்தளம் மற்றும் சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .