A.P.Mathan / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
'விவாகரத்துப் பெற்றவர்கள் எல்லோரும் எதிரிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே... பிரிந்த பின்னரும் நண்பர்களாக இருக்க முடியும்...' என நடிகை சோனியா அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வராகவனை காதலித்து கரம்பிடித்த சோனியா அகர்வால், கருத்து முறண்பாட்டால் அண்மையில் விவாகரத்து பெற்றுக்கொண்டார். விவாகரத்து பெற்றுக்கொண்டதன் பின்னர் மீண்டும் நடிப்பதற்கு வந்துவிட்டார். 'வானம்' படத்தில் சிம்புவுடன் நடித்துவருகிறார்.
சிம்பு தன்னுடைய படத்தில் சோனியாவை நடிக்க வைத்ததில் தனுஷ் தரப்புக்கு மனஸ்தாபம் என்ற செய்தியும் அண்மையில் பரவியிருந்தது. இந்நிலையில் தன்னுடைய 2ஆவது சுற்றினை ஆரம்பித்திருக்கும் சோனியாவிடம் முன்னாள் கணவன் பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்துக் கூறியிருக்கிறார்.
'பிரிந்த தம்பதிகள் எதிரிகளாக இருப்பதையே அனைவரும் விரும்புகிறார்கள். அது ஒவ்வொருவருடைய மனோநிலையினையும் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய முன்னாள் கணவனை சந்தித்தால் கோவப்படமாட்டேன். அவரிடம் கோபப்படுவதற்கு எதுவும் இல்லை. முகத்துக்கு முகம் நேரடியாக சந்தித்தால் புன்னகையுடன் கை கொடுக்கவே நான் விரும்புவேன்...' என்று கூறியிருக்கிறார் நடிகை சோனியா அகர்வால்.


1 hours ago
1 hours ago
1 hours ago
yaseem Friday, 29 October 2010 06:19 AM
அவருடைய முகவரியை தர முடியுமா ?
Reply : 0 0
manimaaran Friday, 05 November 2010 08:28 PM
சுப்பர் சோனியா மேடம் இப்டித்தான் இருக்கனும் பொண்ணுங்க .
Reply : 0 0
xlntgson Thursday, 18 November 2010 08:35 PM
உங்களுடைய முகவரியை அனுப்பி வையுங்கள் அவருடைய முகவரியை அனுப்பி வைக்கின்றேன்! (அவர் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் தான்!)
Reply : 0 0
MOHAMED ITHREES Sunday, 05 December 2010 08:54 PM
சூப்பர்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago