Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பாமன்காடன் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், இரத்தினபுரி பொலிஸாரால் நேற்று (20), கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த, 23, 24 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, ஓட்டோ ஒன்றும், கைக்குண்டொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாமன்காட் பகுதியைச் சேர்ந்த, 37 வயதுடைய தனபால விஜேரத்னம் என்பவரின், தங்க மாலையை கொள்ளையிட்டு, அவரை தாக்கி கொலை செய்ய குற்றச்சாட்டின் பேரில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று (21), இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago