Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 13 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிபரப்பிய குற்றச்சசாட்டில், கல்முனை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறுதி பிரசாரக் கூட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் இன்று (13) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடல் திடீரென ஒலிபரப்பப்பட்டது.
இந்த விடயம், கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிஸார், ஒலி, ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
-பாறுக் ஷிஹான்
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago