Editorial / 2019 நவம்பர் 13 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவசியம் இல்லையென, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரணத் தண்டனை கைதியொருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு சிறைக் கைதிகள் முன்னெடுத்த மூன்றாவது நாளாக இன்று (13) தொடர்கின்றது.
வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது ஏறி குறித்த கைதிகள் இருவரும் நேற்று முன்தினம் (11) போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.
2005ஆம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் வசித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago