Editorial / 2020 ஜனவரி 15 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்கள் மற்றும் நிறைவேற்று குழுக்களின் தலைவர்களின் மாதாந்த கொடுப்பனவினை 1 இலட்சம் ரூபாய் வரை வரையறுத்து ஜனாதிபதி செயலாளரால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிரூபத்துக்கு அமைய குறித்த தலைவர்களுக்கு உத்தியோகப்பூர்வ வாகனம் ஒன்று மாத்திரமே வழங்கப்படும்.
அத்துடன், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அந்த உறுப்பினர்களுக்கு உத்தியோகப்பூர்வ வாகனங்களை வழங்க வேண்டாம் என, ஜனாதிபதி செயலாளர் ஆலோசனை கூறியுள்ளார்.
அரச செலவீனத்தை குறைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
22 minute ago
29 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
1 hours ago
5 hours ago