2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை நடத்தவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கோட்டையிலிருந்து பாணந்துறைக்கும் நீர்கொழும்புக்குமான விசேட ரயில் சேவை, இன்றும் நாளையும் இடம்பெறுவதாக, ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான விசேட ரயில் சேவைகளும் இடம்பெறுகின்றன.

இதேவேளை, பதுளை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் தடம்புரண்ட தபால் ரயில் சேவைகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .