Editorial / 2019 நவம்பர் 19 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
புத்தளம்- குருநாகல் பிரதான வீதியில், மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (19) இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் அடங்கலாக நால்வர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வாகன சாரதி நித்திரை கலக்கத்துடன் அதிக வேகத்தில் பயணித்துள்ள நிலையில், எதிரே வந்த கெப் வாகனம் மற்றும் வான் என்பவற்றுடன் மோதுண்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த வாகனங்களில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago