Editorial / 2017 ஜூலை 19 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நுழைவதற்கு கடினமான முறையில் மூடிக் காணப்படும் வீடுகள் மற்றும் சொத்துகளினுள் உள்நுழைந்து பரீட்சிப்பதற்கும் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் சட்டமும் ஒழுங்கும், தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நானாயக ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பு மற்றும் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்களில், முறையற்ற முறையில் திண்மக் கழிவுகளை அகற்றுவதைத் தடுத்தல் மற்றும் டெங்கு நோய்த் தொற்றல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகளை செயற்படுத்துவது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன்விவரம் வருமாறு,
மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை செயற்படுத்துவது தொடர்பில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
12 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
36 minute ago