2025 ஜூலை 12, சனிக்கிழமை

விசுவமடுவில் தாயொருவர் மீது பாலியல் வல்லுறவு;6 படையினர் விளக்கமறியலில்

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதியில் மீள்குடியேறிய இளம் தாயொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 6 படையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரு பிள்ளைகளின் தாயாரான 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி 6 படையினரும், நேற்றுக் காலை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 09 June 2010 09:18 PM

    விளக்கமறியல், பின்னர் விடுதலை! தனி நாடு ஒன்றே எமக்கு தீர்வு என்று கூறுகின்றவர்களுக்கு போதும் இம்மாதிரியான சம்பவங்கள், இவர்களது சீருடை கழற்றப்பட்டு வேலையைவிட்டு அனுப்பி மீண்டும் அந்த பக்கமே தலைகாட்டாதபடி செய்யாதவிடத்து பயங்கரவாதத்தை முற்றாக களைந்து விட்டோம் என்று மார்தட்ட இயலாது. அரச பயங்கரவாதத்தின் முதற்படி கற்பழிப்பும் கொலையும் ஆகும், அதன் பிறகுதான் மற்ற விடயங்கள் அணி வகுக்கின்றன. முப்பதுவருட கால யுத்தத்தில் நாம் என்ன பாடம் படித்திருக்கின்றோம் என்று உலகம் கண்விழித்து பார்த்துக் கொண்டிருக்கிறது!

    Reply : 0       0

    koneswaransaro Wednesday, 09 June 2010 09:31 PM

    இந்தக் காமுகர்கள் விடயத்தில் நீதி விரைவாகவும் கடுமையாகவும் செயல்பட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .