2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

152ஆவது பொலிஸ் தின நிகழ்வுகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 02 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிஸாரின் 152ஆவது வருட பொலிஸ் தின நிக​ழ்வானது,  நாளை (3) பிற்பகல் 2 மணியளவில், பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,  அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர  உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் இடம்பெறவுள்ள விசேட அம்சங்களைக் கண்டுகளிக்கும்  சந்தர்ப்பம் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .