Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு - திருமலை வீதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு தங்க நகை மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.
பகல் வேளையில் வீட்டின் பின்புறமாக உடைத்துக் கொண்டு வந்த திருடர்கள் அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம் இடம்பெற்ற நிலையில் ஆலயத்திற்கு அந்த பகுதி மக்கள் சென்றிருந்த நிலையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மட்டக்களப்பு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Apr 2026