Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(செவானி சிநோன், இந்திக்க ஸ்ரீஅரவிந்த)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் முப்படைத் தளபதிகள் மற்றும் ஏனைய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இன்று புதன்கிழமை மாலை சாட்சியமளித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இன்று மாலை இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசேரா சமரசிங்க மற்றும் விமானப்படத் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் சாட்சியமளித்தனர்.
வடபகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பிரசன்னமாகியிருந்தபோதிலும், அந்த சங்கம் இராணுவத்தினருக்கு எதிராக எந்தவித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்திருக்கின்ற நிலையிலும், பாரியளவிலான இராணுவத்தினர் வடபகுதியில் உள்ளனர். ஆனாலும், இவர்கள் படிப்படியாக குறைக்கப்படுவதுடன், சிவில் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.(படப்பிடிப்பு:-கீத் ஸ்ரீ டி மெல்)
11 minute ago
34 minute ago
37 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
37 minute ago
38 minute ago