Super User / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

(லக்னா பரணமன்ன)
எதிர்வரும் 19, 20, 21 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் பல்கலைக்கழகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் உயர்கல்வி அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து 21 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மேலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக மேற்படி ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்கள் உயர்கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தனர். அதன்பின் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 12 பொலிஸாரும் 8 மாணவர்களும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago