Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் தேவைகளுக்காக சில அமைப்பினர் பல்கலைகழக மாணவர்களை பயன்படுத்தி வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக அவர்களை திருப்பிவிட்டு அதன் மூலம் அவ்வமைப்பினர் பயனடைய பார்க்கிறார்கள் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மாணவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அதன் மூலம் தீர்வு காண்பதை விடுத்து ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி சீர்கெடுகின்றது.
இதேவேளை பல்கலைகழக மாணவர்களை முதன்மைப் படுத்தி ஆர்பாட்டங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுவதற்கென்றே சில குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் குறித்து புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கியுள்ளனர். அவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.(M.M)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026