Kogilavani / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.பி.சேனாரட்ன)
பெண் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கண்டி பொலிஸ் விசேட குற்றச்செயல் பிரிவைச் சேர்ந்த பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி ஆண் இன்ஸ்பெக்டரினால் முன் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை கண்டி பிரதான நீதவான் உதய கரலியத்த ஏற்றுக்கொண்டுள்ளார்.
தன்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தான் எந்த நேரமும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படலாம் என எதிர்பார்ப்பதனாலலேயே தான் இந்த முன் ஜாமினை கேட்பதாக அவர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.
பிரதான நீதவான், இந்த முன் ஜாமினை 10000 ரூபா காசு, ஒரு இலட்சம் ரூபா சரீர பிணை என்ற நிபந்தனைகளின் கீழ் வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரின் முறைப்பாட்டின் உண்மை தன்மைப்பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் எஸ்.பெரமுன தமிழ்மிரருக்கு கூறினார்.
3 hours ago
9 hours ago
Hot water Thursday, 01 December 2011 08:38 PM
வேலியே மற்றொரு வேலியை மேய்கிறதா?
Reply : 0 0
kiyas Thursday, 01 December 2011 09:17 PM
இப்படியுமா நடக்குது
Reply : 0 0
Regan Thursday, 01 December 2011 09:45 PM
பொலிஸ்கார், பொலிஸ்கார் ...
Reply : 0 0
anas Friday, 02 December 2011 06:23 PM
என்ன கொடும சார் இது ???? பொது மக்களின் நிலை ?????
Reply : 0 0
suthan Friday, 02 December 2011 07:04 PM
இது தாண்டா போலீஸ்
Reply : 0 0
Rinas Saturday, 03 December 2011 02:57 AM
போலீஸ் ??? போலீஸ் ??? போலீஸ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago