2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

5 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தாள்கள் சிக்கின

Kanagaraj   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாவின் மதிப்பில் ரூ.5 கோடி பெறுமதியான பல்வேறு நாடுகளின் பணத்தாள்களை கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றியுள்ளனர்.

இந்த பணத்தாள்களை பயணியொருவர் தன்னுடைய பயணப்பையில் மறைத்துவைத்துகொண்டு டுபாய் ஊடாக கட்டாருக்கு செல்வதற்கு முயன்றபோதே அவருடைய பயணப்பையிலிருந்து இந்த பணம் மீட்கப்பட்டதாகவும் அப்பிரிவினர் அறிவித்துள்ளனர். 

சந்தேகநபர், கொழும்பு-15 மட்டக்குளிய பிரதேசத்தைச்சேர்ந்த 36 வயதான நபர் என்றும் அவரையும் கைது செய்துள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .