Super User / 2011 ஜனவரி 12 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச ஊழியர்களுக்கான வயது எல்லை 60 வருடங்கள் என்ற கொள்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் 60 வயதின் பின்னர் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் பொதுவிவகார உள்ளுராட்சி அமைச்சர் ஜோன் செனவிரட்ன இன்று தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் முன்னர் 55 வயதில் ஓய்வு பெற வேண்டும் எனவும் அதன்பின் 2-3 வருடங்களுக்கு சேவை நீடிப்பு பெறுவதற்கு வருடாந்தம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இருந்தது.
இனிமேல் அரச ஊழியர்கள் 57 வயது வரை கடமையாற்றுவதற்கு தகுதியானவர்களாவர். அதன்பின் 60 வயதுவரை சேவை நீடிப்பு பெறுவதற்கு வருடாந்தம் விண்ணப்பிக்கலாம். 60 வயதுக்கு அப்பால் சேவை நீடிப்புவழங்கப்பட மாட்டாது என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
எனினும் இக்கொள்கை உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்;ற நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் ஆகியோருக்குப் பொருந்தாது. அவர்களுக்கான சேவைக்கால வயதெல்லை முறையே 65, 63, 61 ஆகும்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago