Editorial / 2019 நவம்பர் 25 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு, குறித்த திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஊழியர்களின் பெயர் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெயர் பட்டியில் இன்று (25) அதிகாலை விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், பெயர்களை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, தமது திணைக்களத்துக்கு அறிவிக்காமல் குடும்பத்துடன், நேற்று (24) பிற்பகல் 12.50 மனிக்கு சுவிட்ஸர்லாந்து சென்றபின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago