Editorial / 2020 நவம்பர் 27 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அஜித் டோவால் இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்களாதேஷ், சீசெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பு மட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்து சமுத்திரத்தின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரிவுபடுத்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த மாநாடு இறுதியாக 2014 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்றதுடன், 6 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக இம்முறை கொழும்பில் நடக்கவுள்ளது.
19 minute ago
34 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
38 minute ago
48 minute ago