J.A. George / 2021 மார்ச் 03 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமருடன் நேற்று (02) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பல கட்டங்களின் கீழ் 135,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025