Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 165 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 3, 165 A காத்தான்குடி மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , 165 B காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 166 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 2, 166 A காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
167 A காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 B காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 D புதிய காத்தான்குடி மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பண்டாரகம – அட்டலுகம, மொனராகலை – படல்கும்புற ஆகிய பகுதிகளும் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பண்டாரகம மற்றும் அட்டலுகம பகுதிகளில் 660 A எப்பிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும், 659 B பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மொனராகலை – படல்கும்புற பகுதியில் அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025