Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 ஜனவரி 20 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதை தொடர்ந்து, இதுவரை 14 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை நிலையங்களிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நேற்று(19) இரவு 7.30 மணியளவில் புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
கொலன்னாவ – மீதொட்ட பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றும் குறித்த ஊழியர் கடந்த 13 ஆம் திகதி PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி, கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
43 வயதான குறித்த நோயாளர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
16 minute ago
19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
37 minute ago