Shanmugan Murugavel / 2020 நவம்பர் 21 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொட – பேலியகொட கொவிட்-19 கொத்தணியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 16,022ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 257 கொவிட்-19 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக இன்று மாலை அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முன்னர் அடையாளங்காணப்பட்ட மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர்.
இந்நிலையில், தற்போது கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இலங்கையில் 19,537ஆக அதிகரித்துள்ளது. இதில், 13,590 நோயாளர்கள் முழுமையாக கொவிட்-19 இலிருந்து குணமடைந்ந்துள்ளதாகவும், இன்னும் 5,873 பேர் மருத்துவக் கண்காணிபில் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026