Gavitha / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் மீன், கருவாடு, மாசி மற்றும் நெத்திலி போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கான விசேட வியாபாரப் பண்டவரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் மீன் விற்பனை குறைந்துள்ள நிலையில், அவற்றைக் கருவாடாக்கும் நடவடிக்களை, உள்ளூர் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே, மேற்படி அத்தியாவசியப் பொருள்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதென, மீன்பிடி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கருவாட்டுக்கு 127 ரூபாயும் மாசி ஒரு கிலோகிராமுக்கு 302 ரூபாயும், நெத்திலி ஒரு கிலோகிராமுக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில், விசேட வியாபாரப் பண்டவரி அதிகரிக்கப்பட்டுள்ளதென, அமைச்சு அறிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago