Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெலோவின் தலைமைக்குழு, எதிர்வரும் 8ஆம் திகதியன்று, வவுனியாவில் பொதுக் கூட்டத்தை நடத்த, தீர்மானித்துள்ளது.
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், தமிழ் மக்களுக்குச் சாதகமான எத்தகைய விடயங்களை மேலும் சேர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே அடுத்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.
வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழு, அவசரமாக, சனிக்கிழ மை கூடியது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
இடைக்கால அறிக்கை, மற்றும் உப-குழுக்களின் அறிக்கை என்பவற்றில் உள்ள சாதக மற்றும் பாதக விடயங்களை நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஊடாக ஆராயத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில், புதிய அரசமைப்பில் தமிழர் நலன்சார்ந்து மேலதிகமாகச் சேர்க்கப்பட வேண்டிய விடயங்களை அடையாளம் கண்டு அதனை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
27 Apr 2024
27 Apr 2024