2024 மே 03, வெள்ளிக்கிழமை

கறுப்பு பட்டியலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது

Yuganthini   / 2017 ஜூலை 26 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்​தவொரு பாரதூரமான தாக்குதல்களை நடாத்தியதாக பதிவுகள் எதுவும் இல்லாதமையினால் அப்பட்டியலிருந்து நீக்கியதாக, அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2003ஆம் ஆண்டு இப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் பெயர் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக ​ வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .