2026 மார்ச் 04, புதன்கிழமை

சு.க உறுப்பினர்கள் பொதுஜன முன்னணியில் இணைவு

Editorial   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய கிழக்கு மாகாண ச​பை உறுப்பினர்கள் மூவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.டீ வீரசிங்க , டீ.எம்.ஜயசேன,சந்ரா தெவரப்பெரும ஆகியோரே இவ்வாறு ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துள்ளனர்.

எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் கால எல்லை நிறைவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(28) நடைபெற்றது .இதில் பங்கேற்காத குறித்த மூவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன், இதன்போது தாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக  கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X