2026 மார்ச் 02, திங்கட்கிழமை

தேசிய அரசாங்கம் 2020 வரை தொடரும்- ஐ.தே.க இன்று தீர்மானம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 11 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழான தேசிய அரசாங்கத்தினை 2020ஆம் ஆண்டுவரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு  இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன், இன்று (11) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் முடிவுகள் தேசிய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள தகவலை அவதானத்தில் எடுத்துக்கொண்டு எதிர்வரும் நாட்களில் சில பல மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .