2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீர்கொழும்பில் நான்கரை வயது சிறுவனுக்கு கொரோனா

Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாஜகான்
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், கொரோன வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த  நான்கரை வயது சிறுவனுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

நீர்கொழும்பு அக்கரபனா பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த 3 ஆம்  திகதி இருமல், சுவாசப் பிரச்சினை  காரணமாக  கொரோன வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில,; குறித்த சிறுவனுக்கு  கொவிட்-19 நோய் இருப்பது தெரியவந்ததாகவும் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக,  நீர்கொழும்பு பொது வைத்தியசாலை பணிப்பாளர் சுஜீவ ரத்நாயக்க தெரிவித்தார்.

நீர்கொழும்பு அக்கரப்பனா கந்த சுரித்து கம  எனும் இடத்தில் வசிக்கும் குறித்த சிறுவனுக்கே    கொவிட்-19 தொற்று  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இச் சிறுவன் நீர்கொழும்பு பொது வைத்திய சாலையில் அனுமதிப்பதற்கு முன் நீர்கொழும்பு முன்னக்கரை  பிரதேசத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும், அக்கரப்பனா பிரதேசத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும் சிகிச்சைபெற்றுள்ளார்.

அத்துடன், இச்சிறுவரின் குடும்பத்தார் நீர்கொழும்பில் பல இடங்களுக்கும் சென்றுள்ளதால், குடும்பத்தார் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் வீடு அமைந்துள்ள வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக,  கட்டான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்  யசந்த ரத்னாயக்க  தெரிவித்தார். 
  
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள  சிறுவனின் தாயார் கர்ப்பிணி என்றும் பாட்டி நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ள சிறுவனுடன் வைத்தியசாலையில் இருந்தவரென்றும் வீட்டில் மொத்தமாக ஆறு பேர் வசிப்பதாகவும்  கட்டான பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் முன் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு காய்ச்சல்  இருப்பதாக சுகாதாரப்பிரிவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பெண்மணி விசேட அம்புலன்ஸ் மூலமாக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .