2026 மார்ச் 02, திங்கட்கிழமை

மஹிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளரின் வீட்டுக்குச் சென்ற FCID அதிகாரிகள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 11 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவின் வீட்டுக்கு இன்று (11) பிற்பகல் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ. எஸ்.என். அலைவரிசையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடித் தொடர்பான வாக்கு மூலத்தை வழங்கவதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகைத் தருமாறு FCID அதிகாரிகள் ரொஹான் வெலிவிட்டவிடம் தெரிவித்துள்ளனர்.

ரொஹான் வெலிவிட்ட பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின்  கட்சித் தலைமையகத்துக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணப்பிரிவு அதிகாரிகள் ஹோமாகமையில் உள்ள தனது வீட்டுக்கச் சென்றுள்ளமைத் தொடர்பில் தனக்கு தெரிய வந்ததையடுத்து, உடனடியாக தனது வீட்டுக்கு தான் சென்றதாகவும் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .