2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

லண்டன் தீ: இலங்கையர்கள் சிக்கியுள்ளனரா என விசாரணை

Editorial   / 2017 ஜூன் 14 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் லண்டன் நகரிலுள்ள 27 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால், இலங்கையர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பான தகவல்களை, அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரியுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாக்கா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், தீ விபத்துக்குள்ளான கட்டடத்தில், இலங்கையர்கள் எவரும் இருக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (14) அதிகாலை ஏற்பட்ட இந்தத் தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்டடத்துக்குள் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X