2026 மார்ச் 02, திங்கட்கிழமை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பறக்கும் சீன தேசியக்கொடி

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்​தோட்டை மாகம்புற துறைமுகத்தில் இன்று (1) காலை சீனா நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

குறித்த துறைமுகமானது டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சைனா மார்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக இன்று சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அங்கு எமது நாட்டின் தேசியக்கொடி மற்றும் துறைமுக அதிகாரசபையின் கொடி என்பன ஏற்றப்பட்டிருந்ததுடன்,இலங்கையின் தேசியக்கொடி ஏனைய கொடிகளை விட ஒன்றரை அடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது.

எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  இலங்கையின் கொடியின் உயரம் குறைக்கப்பட்டு ஏனைய கொடிகளின் உயரத்துக்கு சமனாக கொண்டு வரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .