2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

14 ஆம் திகதி பாரிய கடன் தொகையை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வரலாற்றில் செலுத்த வேண்டிய பாரிய கடன் தொகையான, 2,600 மில்லின் அமெரிக்க டொலரை எதிர்வரும் 14 ஆம் திகதி செலுத்தவெண்டியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்கு எதிர்மறை தாக்கத்தை செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில்  சிரமங்களை எதிர்கொள்ள நேரிடினும், மக்களுக்கு நன்மை பயக்கும்  ஒரு வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்க எண்ணியுள்ளதாக, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .