Super User / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கெலும் பண்டார)
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் தமிழ் மக்களை ஊக்குவிக்க அரசு தயார் இல்லை என விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தமது கட்சிக்கு இந்த அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எதுவும் தெரியாது என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
"ஏனைய கட்சிகளுக்கு தெரிவித்தமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. எமக்கு எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. அரசியலமைப்பு மாற்றத்தின் போது அரசுக்கு தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை என்பது இதன் அர்த்தமா?" என அவர் கேள்வி எழுப்பினார்.
3 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
26 Mar 2026
26 Mar 2026