2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

21 மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம்

Editorial   / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

கிளிநொச்சி, மன்னார், நுவரெலியா, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இதுவரை எவரும் பதிவாகவில்லை.

கொழும்பு மாவட்டத்திலேயே இதுவரை அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 155 பேரும், களுத்துறையில் 63 பேரும் புத்தளத்தில் 39 பேரும் யாழ்ப்பாணத்தில் 16 பேரும் குருநாகலவில்15 பேரும் கண்டியில் 11 பேரும் அநுராதபுரத்தில் 10 பேரும் இரத்தினபுரியில் 7 பேரும் கோலையில் 7 பேரும் மொனராகலையில் 4 பேரும் ஹம்பாந்தோட்டையில் 3 பேரும் பதிவாகியுள்ளனர். 

ஏனைய மாவட்டங்களில் ஒருவர், இருவர் என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X