Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
2.1 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிண்ணியா, 6 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத் இன்று திங்கட்கிழமை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்ததோடு எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சீனக்குடா பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரை சோதனைக்குட்படுத்திய போதே அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025